மதுரை சேடப்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் கண்ணன் உள்ளிட்ட 7 பேரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ வைத்து எரித்துக் கொன்ற வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட 6-வது கூடுதல் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பாண்டிஸ்வரி, முருகேஸ்வரி மற்றும் ராஜபாண்டி ஆகிய 3 பேருக்கும் தலா 8 ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், மூவருக்கும் தலா ரூ.45,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது.




