கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை சரியாக்க இதை மட்டும் குடித்தால் போதும்..!!
கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டது. குளிர்காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை விட உடலில் கோடைகாலத்தில் தான் அதிக அளவு பிரச்சனை ஏற்படும். குறிப்பாக உடல் உஷ்ணம் அதிகரிக்கும். இதனால் பலவிதமான பிரச்சனைகள் நம் உடலில் வரும். இந்நிலையில், இந்த உடல் உஷ்ணத்தை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை சரியாக்க இதை மட்டும் குடித்தால் போதும்.
அதிமதுரம் பொடி – ரெண்டு ஸ்பூன்
கடுக்காய் பொடி – ரெண்டு ஸ்பூன்
திப்பிலி பொடி – ரெண்டு ஸ்பூன்
மிளகுப்பொடி – ரெண்டு ஸ்பூன்
இவற்றையெல்லாம் சம அளவு எடுத்து அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவு பொடியை ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்த அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து மூன்று நாட்களுக்கு இரவு உணவுக்கு பின் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் சரியாகும்.




