சாப்பிடும் முன்பு இலையைச் சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ஏன் தெரியுமா..??
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே இலையில் சாப்பிடும் போது சாப்பிடுவதற்கு முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளித்து பின்பு தான் அதில் சாப்பிட தொடங்குவார்கள். இது ஒரு வழக்கமாகவே இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. சாப்பிடும் முன்பு இலையைச் சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ஏன் என்பதற்கான காரணம் நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ, பூச்சிகளோ நமக்கு தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடி சோறு சாதம் வைப்பது உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்கு தெரியாமல் சின்ன சின்ன உயிரினங்கள் புலு பூச்சிகள் கொல்லப்பட்டிருக்கும். அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடி சாதம். அந்த கைப்பிடி சாதம் பிற உயிர்களுக்கு உணவாக வேண்டும் என்ற உயிரிய ஜீவகாருண்ய நோக்கமே. இதுதான் இதன் முழுமையான காரணம்.




