Oplus_16908288
பிரார்த்தனைக்காக வந்த சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தொடரப்பட்ட வழக்கில், பாதிரியார் ஆபிரஹாமுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கடந்த 2022ஆம் ஆண்டு பாதிரியார் ஆபிரஹாம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வெளியானபோது, குற்றவாளி நீதிமன்றத்தில் மயங்கியதாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு சட்ட நடைமுறைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.




