ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் லக்னோ அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் ஜெய்ப்பூரில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற லக்னோ, முதலில் பேட்டிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 180க்கு 5 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், மார்க்ரம் 66 ரன்களும் படோனி 50 ரங்களும் எடுத்தனர். பௌலிங்கில் ராஜஸ்தான் அணியின் ஹசரங்கா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய ராஜஸ்தான் அணி சுமாராக தான் விளையாடியது. யஷஸ்வி 74 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை பெரிதாக வழங்கவில்லை. இறுதியில் ராஜஸ்தானால் வெறும் 178 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.



