காலம் காலமாக கிரிக்கெட் விளையாட்டில் பல ஜாம்பவான்கள் உருவாகியுள்ளனர். இவர்களுக்குப் பிறகு இப்போது பல இளம் கன்றுகள் சாதனைகள் படைத்து வருகின்றது. அப்படி கடந்த சில நாட்களாக மக்களிடையே பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வரும் ஒரு வீரர் தான் ஜெய்ஸ்வால்.
இவரது தொடக்க ஆட்டத்தால் இந்திய அணி பலமுறை வென்றுள்ளது. மேலும் இவரது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணையை வலுப்படுத்தி பல போட்டிகளை ஜெயிக்க வைத்தது. ஐபிஎல் ஆடி வெறும் 2 வருடத்தில் இந்திய அணிக்கு தேர்வான ஒரு வீரர் தான் ஜெய்ஸ்வால். இவர் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக ஆடி வருகிறார்.
அதிலும் தனது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் இப்பொழுது மும்பையில் இருந்து கோவா அணிக்கு மாற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதை அவரிடம் கேட்டபோது அவருக்கு கேப்டன் பொறுப்பு வர உள்ளதாக இருந்ததாகவும் அதை வேண்டுமென்றே அவரிடம் இருந்து பறித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் தான் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு மும்பை அணியே காரணம் என்றும் தனக்கு நடந்த அநீதிக்காக கோவா அணிக்காக இனி விளையாட போவதாகவும் அறிவித்துள்ளார்.




