ஆகஸ்ட் 3 உள்ளூர் விடுமுறை… 2 நாட்கள் தொடர் ஓய்வு..
ஆடிப்பெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஆகஸ்ட் 3ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஞாயிற்றுக்கிழமையுடன் இணைந்து அந்த மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது.
விடுமுறையை ஈடுசெய்ய தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 8 பணிநாளாகவும், ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 22 பணிநாளாகவும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.




