தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எழுத்தாளர், பேச்சாளருமான தமிழருவி மணியனின் மனைவி பிரேம குமாரி நேற்று (டிச., 30) காலமானார். அவரது மறைவுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தனது தலைமையில் இயங்கிய காமராஜர் மக்கள் கட்சியை கடந்த 20ஆம் தேதி ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகாவுடன் தமிழருவி மணியன் இணைத்தது குறிப்பிடத்தக்கது.




