திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்.. பக்தர்கள் கவனத்திற்கு..!!

 

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

புதிய அறிவிப்பின்படி, கட்டண தரிசனத்திற்கு மாலை 6.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், பொது தரிசனத்திற்கு இரவு 7.00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், திருவிழா, விசேஷ பூஜைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகையைப் பொறுத்து இந்த தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 

எனவே, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தரிசனத்திற்குச் செல்ல திட்டமிடும் பக்தர்கள், புதிய நேர அட்டவணையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Read Previous

ஆபத்தான ஆன்லைன் தொடர்பு.. இளம்பெண் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Read Next

பட்டப்பகலில் இளைஞர் உயிரிழப்பு.. மதுரை அருகே பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular