சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகராறின்போது அனுபமா, துருவ் விக்ரமை செருப்பால் அடித்ததாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. எனினும், இதுகுறித்து இருவரின் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
‘பைசன்’ படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் கூறப்படும் நிலையில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துருவ் விக்ரமை ‘அன்ஃபாலோ’ செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.




