நடிகை நயன்தாரா ஆவணப்பட (BEYOND THE FAIRYTALE) வழக்கு தொடர்பாக, டார்க் ஸ்டூடியோ நிறுவனம் வரும் அக்., 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் பாடலை பயன்படுத்தியுள்ளதாக ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டார்க் ஸ்டூடியோ தகவல் அளித்த நிலையில், மனுதாரர் தரப்பு அதனை மறுத்துள்ளது.




