விடுபட்ட மகளிருக்கு விரைவில் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளுடனான இன்றைய சந்திப்பின்போது பேசிய அவர், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விடுபட்ட தகுதி வாய்ந்த அனைவருக்கும் விரைவில் தொகை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.




