எந்த வீட்டில் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
பெண்கள் மாதவிடாய் முடிந்த ஐந்து நாள் கழித்து வீட்டை அலசிவிட்டு பிறகு விளக்கு போடுங்க அதுதான் நமக்கும் நல்லது நம் வீட்டுக்கும் நல்லது.
சாமிக்கு படைக்கும் போது அல்லது விரதம் இருக்கும் போது அன்னம் உப்பு நெய் இவைகளை கைகளால் பரிமாறக்கூடாது. ஏனென்றால் அப்படி பரிமாறினால் அது மாமிசத்திற்கு சமம்.
வீட்டில் மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு தரையை தடவி தாயும் விளையாடுவது பேன் பார்த்தல் நகம் வெட்டுவது இந்த செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.
எந்த ஒரு நல்ல விசேஷத்திற்கும் நீங்கள் தேங்காய் உடைக்கும் போது உங்கள் குலதெய்வத்துக்கு முதலில் உடைத்த பிறகுதான் மற்ற தெய்வத்திற்கு உடைக்க வேண்டும். இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.




