நீதிமன்ற உத்தரவின் பேரில், சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் பலத்த பாதுகாப்புடன் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை சோனம் வாங்சுக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, மருத்துவமனையில் அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




