அன்றாட வேலையை
அலுக்காது முடித்தவள்
அந்த நேர வேலைக்காய்
ஆவலோடு காத்திருக்கிறேன்
கட்டில் வரை வந்தவனோ
எனை காணாது உறங்குகிறான்
காதலாய் இல்லையெனினும்
காமத்திற்காவது கட்டியணைத்துக்கொள்ளடா
ஆசையாய் இல்லையெனினும்
அலுப்பிற்காய்
கை கால்ககளை
என் மேலிட்டு கொள்ளடா
இடை நோக இல்லையெனினும்
இதழ் நோக முத்தமாவாது இட்டு போ
விடியும் வரை இல்லையெனினும்
இதழ் திறந்து மூடிடவாது
உள் வைத்து செல்லடா
மறுத்து போனவனாய்
உறங்குகிறாய்
நான் மரபு மறந்து
செல்லவே
பட்டாம் பூச்சியென
பறந்து திரிந்தவளை
திருட்டு பூனையென மாற்றிவிட்டாய்
எதிர் படும் எவனாவது
எனை விரல் தீண்டி..
செல்வானா என்றே
ஏக்கத்தோடு பார்க்கும் படி…




