பழனி கோயில் நிலம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக முகநூலில் பதிவிட்ட வினோத் சூரியகுமார் என்பவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர்களை விமர்சிப்பதை அரசுக்கு எதிரான குற்றமாகவோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவோ கருத முடியாது என தெரிவித்துள்ளது.
மேலும், வினோத் சூரியகுமாரின் முகநூல் பதிவு இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டும் வகையில் அமைந்ததாகவும் எடுத்துக்கொள்ள முடியாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.




