பாகற்காயை ஒருபோதும் உணவில் தவிர்க்காதீங்க..!! பாகற்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் ..!!
பாகற்காயில் உள்ள சக்தி வாய்ந்த மருத்துவ குணங்கள் காரணமாக உலகெங்கிலும் உள்ள பழங்குடி சமூகங்கள் நீரிழிவு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரம்பரியமாக பாகற்காயை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் பாகற்காய் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளது. உதாரணமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 24 பெரியவர்களை உள்ளடக்கிய மூன்று மாத ஆய்வில் தினமும் பாகற்காயை உட்கொள்வதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து கண்டறியப்பட்டது. பாகற்காயில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட குறிப்பிட்ட சேர்மங்கள் இருப்பதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக பாகற்காய் சாறு வயிறு பெருங்குடல் நுரையீரல் போன்ற உடல் பகுதிகளில் உள்ள புற்றுநோய் செல்களை அகற்றுவதில் செயல் திறனை வெளிப்படுத்துகிறது என்பதை ஆய்வு நிரூபித்தது.
அதிக அளவு கொலஸ்ட்ரால் உங்கள் தமனிகளில் கொழுப்புத் தகடுகளை உருவாக்கலாம். உங்கள் இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக மாறுவதால் இதய நோய் அபாயம் அதிகரிக்கும். சமீபத்திய ஆய்வில் பாகற்காய் சாறு கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது என்பது கண்டறியப்பட்டது.




