ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். காபூலில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் தலிபான் படைகள், ‘பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுடன் கடும் மோதல்களில் ஈடுபட்டுள்ளன’ என்று ஆஃப்கான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இருநாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.




