நமது வீட்டில் குழந்தைகள் பிறந்தால் அதை அள்ளிக் கொஞ்ச வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவோம். மேலும் அந்த பிறந்த குழந்தைக்கு முத்தமிடுவது என்றால் நாம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் அப்படி முத்தமிடுவதன் மூலம் அந்த குழந்தைக்கு எத்தனை பாதிப்புகள் ஏற்படும் என்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இதன் காரணமாகத்தான் மருத்துவர்கள் பிறந்த குழந்தைகளுக்கு முத்தமிடக்கூடாது என்று கூறுகின்றனர். நமது தோல் வழியாக விரைவாக பரவும் குணம் கொண்டது கிருமிகள். அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கிருமி தொற்று வர அதிகமாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகத்தான் குழந்தைகளை தொடாமல் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள்.
அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் சுவாச அமைப்புகள் வலுவாக 8 ஆண்டுகள் ஆகும். ஆகையால் முத்தம் கொடுப்பதால் சுவாச பிரச்சனைகளும் அதிகமாக வரும். இதனிடையில் ஒருவருக்கு சளியோ அல்லது காய்ச்சலோ இருந்தால் நிச்சயம் அது குழந்தையை பாதிக்கும். அதுவும் முதல் மூன்று மாதங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்காத காரணத்தினால் தாயை தவிர வேறு யாரும் அந்த குழந்தைக்கு முத்தமிடுவது சரியல்ல. இல்லையெனில் அந்த குழந்தையை தொடும்போது சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்.




