மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர், உத்தர பிரதேசத்தில் வசிக்கும் தனது பெண் தோழியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு முழுவதும் அவருடன் தங்கிய நிலையில், காலையில் கிராமத்தினர் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் இளைஞரின் பெற்றோரை வரவழைத்து அந்த பெண்ணுடன் கிராமத்தில் உள்ள கோவிலில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். விரைவில் அவர்களுக்கு பதிவுத் திருமணமும் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.




