மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் தகுதியான பெண்களின் இறுதி பட்டியல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.




