ஒடிசாவின் ஜாஜ்பூர் மலைஹத் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த இவரது மனைவி கடந்த ஒரு வருடமாக பிரஷாந்த் என்பவருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இதையறிந்து ஆத்திரமடைந்த மனோஜ் மனைவியின் கழுத்தை அறுத்ததுடன், பிரஷாந்தின் பிறப்புறுப்பையும் வெட்டியுள்ளார். சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களை மனோஜ் கொடூரமாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இந்நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




