உ.பி-யை சேர்ந்த முகமது ஆரிஃப் (38) கேரளாவில் கூலிதொழிலாளியாக இருக்கிறார். இவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் முஜீப் (25) என்ற உ.பி இளைஞர் வேலைக்கு வந்துள்ளார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கி பழகியுள்ளார். இதனால் தனது மனைவி முஜீபுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து அவருடன் தகராறு செய்த ஆரிஃப், அவரை துண்டு துண்டாக வெட்டி பையில் போட்டு ஆற்றில் வீசியுள்ளார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.




