கர்நாடகா: பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர், வங்கி பெயரில் வந்த போலி IVR அழைப்பை பின்பற்றி தனது கணக்கிலிருந்த ரூ.2 லட்சம் பணத்தை இழந்துள்ளார். அந்த அழைப்பில், “உங்கள் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு ரூ.2 லட்சம் மாற்றப்படுகிறது. நீங்கள் இந்த பரிவர்த்தனையை செய்திருந்தால், உறுதிப்படுத்த 3ஐ அழுத்தவும், இல்லையெனில் 1ஐ அழுத்தவும்” என கேட்டுள்ளது. குழப்பத்தில் இருந்த அந்த பெண், எண் 1ஐ அழுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் பெண்ணின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது.




