நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் நாளை (அக்.15) மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஜாய் கிரிஸில்டாவும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.




