மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டம் கல்வி, மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1.50 கோடி பெண்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கும், புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கும் தொகை வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நாளை 15ஆம் தேதி என்பதால் வங்கிக் கணக்கில் தொகை டெபாசிட் செய்யப்படும்.




