காதல் எப்போது யாருக்கு வரும் என யாருக்கும் தெரியாது என்பதற்கு இந்த செய்தி ஒரு சாட்சி. பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் தவித்த விஜயராகவன் (79) மற்றும் சுலோச்சனா (75) ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது.இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து, கேரளாவில் உள்ள ராமவர்மபுரம் முதியோர் இல்லத்தில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.




