Oplus_131072
மூளையைப் பலப்படுத்தும் மூலிகைப் பால்…….
வல்லாரைக் கீரை, அஸ்வகந்தா, நாட்டுச் சர்க்கரை தலா அரை கிலோ எடுத்துப் பொடித்து, டப்பாவில் அடைத்துக்கொள்ளவு*ம்…….
தினமும் ஒரு டம்ளர் சூடான பாலில், இந்தப் பொடி ஒரு ஸ்பூன், இரண்டு வால்நட்களைப் பொடித்துச் சேர்த்துப் பருக வேண்டு*ம்…….
பலன்கள்:
அனைவரும் பருகலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, அவர்களின் நினைவாற்றல், அறிவுத்திறன் அதிகரிக்கும். வயதாகும்போது வரும் மறதி நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவு*ம்…..
வலிகளுக்கு மட்டும் அல்ல, எல்லா வியாதிகளுக்கும் உடலைவிட மனம்தான் பிரதான காரணம், சிந்தனையால், ரசாயன மாற்றத்தால் மட்டும் வலிகளும் உபாதைகளும் நிகழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதற்றம்கூட விபத்து ஏற்படக் காரணமாகலாம்; சில ஆபத்துகளை நோக்கிச் செல்லவைக்கலாம்; வெளியிலிருந்து வரும் கிருமியைத் தடுக்கும் சக்தியை இழக்கலாம். மன அளவிலான வியாதித் தடுப்பை ‘சைக்கோ இம்யூனிட்டி’ எனச் சொல்கின்றனர். ‘கில்லி’யிலும் ‘துப்பாக்கி’ படத்திலும், இளைய தளபதி க்ளைமாக்ஸில் கையை, காலை உதறி உயிர் பெற்று எதிரியைத் தாக்குவதும் இந்த சைக்கோ இம்யூனிட்டியால்தானோ.




