ராஜஸ்தான் மாநிலம் நாகார் பகுதியில் பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், 12-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு ஹோட்டலில் இருந்த நபர் ஒருவர் போலீசாரைக் கண்டு பதற்றமடைந்து, ஆடைகளை முழுமையாக அணியாமல் வெளியே ஓடி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.




