தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது பெண் மருத்துவரை, போலி கைது வாரண்டுகளைக் காட்டி ‘டிஜிட்டல் கைது’ செய்வதாக சைபர் குற்றவாளிகள் மிரட்டியுள்ளனர். மேலும், அவர்களுக்கு ரூ.6.60 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். தொடர்ந்து அந்த சைபர் கும்பல் மிரட்டி வந்ததால் மனவுளைச்சலில் இருந்த அப்பெண் செப்.8ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




