அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு, விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு பதிலாக டெல்டா மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




