தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் உத்தரவின்படி, 2026–2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று (ஜூலை 27) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். வேளாண் துறையின் முன்னேற்றம், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, நீர்வள மேலாண்மை, பாசன வசதிகள் விரிவாக்கம் மற்றும் நிலையான வேளாண் வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், வேளாண்மைத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான பரிந்துரைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் இந்தக் கூட்டத்தில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




