இந்தியாவில் ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தற்போது பயன்பாட்டில் உள்ள காகித நோட்டுகள் செல்லாது போய்விடுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு, தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து காகித நோட்டுகளும் வழக்கம்போல தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும், அவற்றை திரும்பப் பெறும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனவே, பழைய ₹10 மற்றும் ₹20 காகித நோட்டுகளை பயன்படுத்துவதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை.




