தெலங்கானா மாநிலத்தில், 11 வயது சிறுமியிடன் ஆட்டோ ஓட்டுநர் தவறாக நடந்த நிலையில், சிறுமி ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுமியிடம் சென்ற ஆட்டோ ஓட்டுநர் சையத் ஷபீர் அலி, தந்தை ஆட்டோ அனுப்பியதாக கூறி சிறுமியை ஆட்டோவில் ஏற்றியுள்ளார். பின்னர், சிறுமியிடம் அவர் தகாத முறையில் நடந்துள்ளார். இதனால், அந்த சிறுமி, ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். சம்பவத்தை அறிந்த சக வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநரை போலீசில் ஒப்படைத்தனர்.




