கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அஸ்வின் ராஜ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் நடந்த இச்சம்பவத்தில், அஸ்வின் சிறுமியுடன் பழகி, கஞ்சா கொடுத்து மயக்கமடையச் செய்து, ஆபாச வீடியோக்களைக் காட்டி பலாத்காரம் செய்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவரிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடித்தனர்.




