உ.பி.: கிரேட்டர் நார்த் வெஸ்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சாக்க்ஷி என்ற பெண்ணும், அவரது மகன் டக்ஸ் ஆகியோர் நேற்று (செப்.13) 13-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளனர். டக்ஷ் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், “நாங்கள் இந்த உலகத்தை விட்டு புறப்பட்டு செல்கிறோம். எங்களுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.




