மேற்குவங்கத்தின் பிர்பும் மாவட்டம் சூரியில், டியூஷன் ஆசிரியரின் வீட்டில் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 9ஆம் வகுப்பு மாணவி டியூஷன் சென்றபோது, ஆசிரியர் இல்லாத நேரத்தில் சக மாணவர்களான இருவரும் சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர்.




