பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில், 17 வயது சிறுமி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணியளவில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் சிறுமியை திடீரென கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் பட்டியாலா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி ஆதாரங்களின் உதவியுடன், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




