காணாமல் போன 7 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை..!! போலீசார் விசாரணை..!!
மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி நகரில் 7 வயது சிறுமி கடந்த வாரம் காணாமல் போனார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை நேற்று (அக். 22) கைப்பற்றியதோடு நேபாளத்திற்கு தப்பி ஓடிய 50 வயது நபரை சம்பவம் தொடர்பாக கைது செய்தனர். மேலும் இருவர் சிறுமி கொலை வழக்கில் கைதாகியுள்ள நிலையில் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.




