சென்னையில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட 5 கொத்தடிமைகள் மீட்பு..!!
சென்னையில் முன்பணம் கொடுத்துவிட்டு வேலைக்காக சேர்த்து கொத்தடிமைகளாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் இன்று (நவ. 05) மீட்டுள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட ஐந்து கொத்தடிமைகளை போலீசார் இன்று (நவ. 05) மீட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் உள்ள திருப்பதி நகரில் ரஷிதா என்பவர் வீட்டில் இருந்த 5 பேரை அதிகாரிகள் மீட்டதாக தெரியவந்துள்ளது. ஒரு பெண் 6 வருடங்கள் பணிபுரிய ஒன்றரை லட்ச ரூபாய் மற்றும் 17 வயது சிறுமி 3 வருடங்கள் பணிபுரிய ரூ.3 லட்சம் முன்பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




