மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.29) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி வரை 89.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவின் சுவேந்து அதிகாரி ஆகியோர் நேருக்கு நேர் மோதும் பவானிபூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.




