ஆந்திராவில் ஜூன் மாதம் காலியாகும் 4 மாநிலங்களவை எம்.பி., பதவிகளில், 3 ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவை. போதிய எம்எல்ஏ பலம் இல்லாததால், இந்தப் பதவிகளை பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சி பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு பதவியை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு வழங்க டெல்லி பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜூன் மாதம் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பில் அண்ணாமலைக்கு அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.




