15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! சிறுவன் உள்பட 2 பேர் கைது..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு மைனர் சிறுவன் மற்றும் 19 வயது இளைஞர் ஆகிய 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறுமியின் ஆண் நண்பருக்கு தெரிந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமிக்கும் அவரது ஆண் நண்பருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. சமரசம் செய்து வைப்பதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.




