நமது இந்திய நாட்டின் பிரதமர் திரு மோடி ஜி அவர்கள் நமது நாட்டின் மேம்பாட்டுக்காகவும் நலனுக்காகவும் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல திட்டங்களை நமது நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்து கொண்டு வருகிறார். அடுத்ததாக பிரதமர் தாய்லாந்து சென்று பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள போகிறார். இன்று செல்லும் அவர் நாளை மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த மாநாட்டில் வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனஸ் மற்றும் நேபாள பிரதமர் சர்மா ஒலி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். அந்த மாநாட்டில் இந்திய பிரதமர் திரு மோடி ஜி அவர்கள் கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வை இடுகிறார். இந்தப் பணி முடிந்தவுடன் அங்குள்ள வாட்போ கோவிலுக்கு அந்நாட்டு பிரதமருடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் நமது இந்திய நாட்டு பிரதமர் திரு மோடி ஜி அவர்கள்.




