நாம் எங்கேயாவது அவசரமாக செல்ல வேண்டும் என்றால் தேர்ந்தெடுப்பது விமானத்தை தான். ஆனால் அவ்வப்போது விமானங்களில் பிரச்சனைகள் வரும். ஒரு சில சமயம் இந்த விமானத்தில் ஏதேனும் கோளாறு நடைபெறலாம். இல்லையெனில் ஏதேனும் மிரட்டல்கள் அந்த விமானத்தில் இருக்கும் பயணிகளுக்கு வரலாம் அல்லது அந்த விமானத்தில் ஏதேனும் தீவிரவாத தாக்குதலும் நடக்கலாம். அதைப்போன்று இன்று ஒரு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு தகவல் கிடைக்கப்பட்டு அந்த விமானம் அவசரமாக தரையிறங்கப்பட்டது.
இந்த விமானம் ஜெய்பூரில் இரந்து மும்பை சென்று கொண்டிருந்தபோது அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 255 பயணிகள் இருந்தனர். இந்த நடவடிக்கை விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயமுறுத்தப்பட்டதால் நடத்தப்பட்டது. கழிவறையில் இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு கடிதம் கிடைத்துள்ளது. ஆகையால் அவசரமாக விமானத்தை தரையிறக்கி விசாரித்து வருகின்றனர். அதில் இருக்கும் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஒரு நல்ல செய்தி ஆகும்.




