நம்மிடத்தில் இருப்பதை வைத்து திருப்தி அடையாதவர்கள் வேற எதிலுமே திருப்தி அடைய முடியாது என்பதை உணர வைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

 

ஒரு அழகிய வீடு இருந்தது. ஆனால் அதில் வாழ்ந்து வீட்டு உரிமையாளருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும், அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால், அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது.அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்புத் தட்டி விட்டது.அவர் ஒரு வீட்டுத் தரகரைக் கூப்பிட்டு, “வீட்டை விற்று விட விரும்புகிறேன். இதில் வாழ்ந்து சலித்துவிட்டது. இந்த வீடு இப்பொழுது எனக்குப் பிடிக்கவில்லை. உடனே விற்க விரும்புகிறேன்” என்று சொன்னார்.

அடுத்த நாள் செய்தித்தாள்களில் அந்த வீட்டுத் தரகர் அவ்வீட்டைப் பற்றி மிக அழகான வீடு விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் கொடுத்து இருந்தார். வீட்டு உரிமையாளர் செய்தித்தாள்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் படித்தார். பிறகு அவர் வீட்டுத்தாகருக்கு தொலைபேசியில் சொன்னார் “என் வீட்டை விற்க வேண்டாம்.”உங்கள் விளம்பரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இம்மாதிரி வீட்டுக்குத்தான் நான் நெடு நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உங்களுடைய விளம்பரம் பார்த்து அறிந்து கொண்டேன். நான் ஏங்கிக் கொண்டிருந்த அதே வீட்டில் தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை உங்கள் விளம்பரம் என்னை திருப்திப்படுத்தி விட்டது என்றார்.இருப்பதில் திருப்தி அடையாதவர்கள் எதிலுமே திருப்தி அடைய முடியாது.

Read Previous

வெளிநாட்டுக்காரன் மனைவி..!! படித்ததில் மனதை கலங்க வைத்த பதிவு..!!

Read Next

வெளியானது JEE இரண்டாம் கட்ட முதல் நிலை தேர்வு முடிவுகள்..!! எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular