Oplus_131072
கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டியவை இதுதான்..!!
பண்டிகை நாளிலோ அல்லது விசேஷ நாளிலோ நம் வாசலில் கோலம் இடும்போது கலர் கோலமாவுடன் மணல் கலந்து போடலாம். அதை தவிர்த்து தயவு செய்து உப்பு கலந்து போடாதீர்கள். ஏனென்றால் பாற்கடலில் தோன்றிய உப்பு மகாலட்சுமி மற்றவர்களின் காலில் படும் ஆகையால் தான். மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு கோலம் போடுவது நிலை வாசலில் இரண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது செல்வ செழிப்பை தரும். வெள்ளிக்கிழமைகளில் மற்றும் விசேஷ நாட்களில் கோலம் போடும்போது காவி கோலம் சேர்த்து போட்டால் பார்க்கவும் அழகாக மங்களகரமாக இருக்கும். செம்மண் எனப்படும் காவி மகாலட்சுமியின் அம்சம் ஆகும். நம் வீட்டு வாசலில் கோலம் அழகாக அமைந்தால் மகாலட்சுமி மகிழ்ச்சி கொள்வாள். கண்டிப்பாக கோலம் போடும்போது இவை எல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.




