கம்பங்கூழ் பற்றிய ஒரு அருமையான பதிவு..!! கட்டாயம் அனைவரும் படிக்கவும்..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் கம்பங்கூழ் என்பது பாரம்பரியமாக கோடை காலங்களில் தினசரி வாழ்க்கையில் உண்ணும் ஒரு உணவாக இருந்தது. குறிப்பாக நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் திணைக்கம்பு கேழ்வரகு போன்ற தானியங்களை வைத்துதான் தினசரி வாழ்க்கையில் அவர்கள் உணவுகளை உண்பார்கள். ஆனால் இந்த காலகட்டத்திலோ பலருக்கும் கம்பங்கூழ் என்றால் என்னவென்று கூட தெரியாது. இந்நிலையில் கம்பங்கூழ் பற்றிய ஒரு அருமையான பயனுள்ள பதிவை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வாரம் இரு முறை கம்பங்கூழ் உண்டு வரலாம். இது மலச்சிக்கலை தடுக்க மிகவும் உதவுகிறது. கம்பு உணவை அடிக்கடி உட்கொள்ளும் போது ரத்தத்தில் இருக்கும் செல்கள் ஆக்சிஜன் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகின்றன. சரும சுருக்கங்கள் ஏற்படுவது குறைகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் அதிக ரத்தப்போக்கும் அடிவயிற்று வலியும் ஏற்படும். கம்பங்கூழ் அடிக்கடி உட்கொள்வதன் மூலம் தடுக்கலாம். அதுமட்டுமின்றி கம்பங்கூழ் அடிக்கடி உட்கொள்வதன் மூலம் மாதவிடாய் தொடர்பான பாதிப்புகள் நீங்கும் என கூறப்படுகிறது.




