உலக சந்தையில் தங்கத்தின் விலையானது ஒரு நாள் உயர்வதும், ஒரு நாள் சரிவதுமாக இருந்து வருகிறது. இதனால் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தங்க இருப்பை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதாக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஆணையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக பண்டார தெரிவித்துள்ளார். இந்த தொடர் விலை ஏற்றத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று (19-05-2025) தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ.8,755 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.70,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, “இன்று (20-05-2025) தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,710-க்கும், சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ. 108-க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.




