Oplus_131072
கந்தசாமி ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்.. அவர் கடையில் தோசைக்கு தொட்டு கொள்ள சீனி கொடுப்பார்கள். ஆனால் சீனி விலைஉயர்வின் காரணமாக சீனி கொடுக்க முடியவில்லை.
ஒரு போர்டு எழுதி போட்டார்.. ‘இன்று #முதல் தோசைக்கு சீனி கிடையாது’
கிச்சாமி அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர். சாப்பிடப் போனார். முதலில் ஒரு தோசை வாங்கினார். இரண்டாவது ஒரு தோசை வாங்கினார். சீனி கேட்டார். முதலாளி சொன்னார் “சீனி கிடையாது..”.
கிச்சாமி சொன்னார் போர்டை படியுங்கள் “#முதல் தோசைக்கு மட்டும் கிடையாது.. இது இரண்டாவது தோசை”.
முதலாளி தலையில் தட்டி கொண்டே சீனி கொடுத்தார். அடுத்த நாள் போர்டை மாற்றி எழுதினார் ‘இனி #மேல் தோசைக்கு சீனி கிடையாது.
கிச்சாமி மறுநாள் வந்தார்..
இரண்டு தோசைக்கு ஆர்டர் கொடுத்தார். ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு தோசை வந்தது. மேலே உள்ள தோசையை சாப்பிட்டு முடித்தார். சீனி கேட்டார்..
முதலாளி “முடியாது போர்டை பார்” .
கிச்சாமி “நீ போர்டை பார் ‘இனி #மேல் தோசைக்கு தானே கிடையாது? கீழே உள்ள தோசைக்கு கொடு என்றார்.
கந்தசாமி அன்னிக்கு மூடியது தான் ஓட்டலை.



